வெள்ளி, 10 அக்டோபர், 2014

திரைக்கதை எழுதுவது எப்படி? [2]

கடந்த பதிவில், ஒரு சம்பவத்தை எப்படி கதையாக மாற்றுகிறார்கள் என்பதை விளக்க மூன்று உதாரணங்கள் தருவதாய் சொல்லி இருந்தேன். அதில் ஒரு சம்பவமாய் ஓ.ஹென்றி யின் சிறுகதை யை பார்த்தோம். மேலும் இந்த கதையைப் பற்றி பார்ப்பதற்கு முன், மற்ற இரண்டு கதைகளுக்கான சம்பவங்களையும் பார்த்துவிடுவோம்!

சம்பவம் 2 (கதை)
ஒரு குக்கிராமம்! அங்கே வாழும் ஆதரவற்ற முதிய தம்பதியர்!
ஆடு வளர்ப்பு மூலம் அவர்களுடை வாழ்வாதாரம் சிக்கல் இன்றி போய்க்கொண்டிருக்கிறது!  முன்புபோல் இப்பொழுதெல்லாம்  பெரியவரால்  ரொம்ப தூரம் போய் ஆடு மேய்க்க  முடிவதில்லை! ரோம்பவே வயதாகி விட்டது! ஊருக்கு அருகிலேயே கூட, இப்பொழுதெல்லாம் ஆடு மேய்ப்பது ரொம்பவே சிரமமாக இருக்கிறது.

இருப்புக்கு இரண்டு குட்டிகள் போக மற்ற எல்லாவற்றையும் விற்றுவிட்டால் வேலைச் சுமை குறையும் என்று நினைக்கிறார். நல்ல வியாபாரி கிடைக்க வேண்டும்!

ஒரு நாள், வழக்கம் போல்  கிராமத்திற்கு வெளியே ஒரு வரண்ட மேய்ச்சல் நிலப் பகுதியில் ஆடு மேய்த்துக் கொண்டிருக்கிறார்! பசுமையான புற்களை விட வறண்டு காய்ந்த புற்கல்தான் இங்கே அதிகம்!  ஆனாலும் இந்த இடம் பெரியவர்க்கு மிகவும் பிடித்த இடம்!
கம்பீரமான ஐயனாரப்பன் சிலையின் கீழ் இருக்கும் மேடையில்
உட்கார்ந்து கொண்டு, சற்று தூரத்தில் தெரியும் சாலையை வேடிக்கைப் பார்ப்பது என்றால் யாருக்குத்தான் பிடிக்காது?

கிராமத்து சாலையில்  எப்பொழ்தாவதுதான் வாகனங்கள் வரும்! அதை பார்கிற வாய்ப்பு எல்லோருக்கும் கிடைக்காது!

அன்று அப்படித்தான் ஒரு வாகனம் வந்தது. சற்று பெரிய வாகனம். அதுபோல் ஒரு வாகனத்தை பெரியவர் இதற்கு முன்பு பார்த்ததே இல்லை! பெரியவர் சற்று உற்சாகத்துடன் எழுந்து உட்கார்ந்தார். சாலையில் போய்க்கொண்டு இருந்த வாகனம் சட்டென்று திரும்பி, சாலையை விட்டு விலகி பெரியவரை நோக்கி மேய்ச்சல் நிலத்திற்குள் வேகமாக வந்தது! பெரியவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை!

அந்த வாகனம் வந்து,  பெரியவர் அருகே நின்றது. வாகனத்தில் இருந்து இரண்டு வெள்ளைகாரர்கள் இறங்கினார்கள். ஆம் வெள்ளைகாரர்கள்!

பெரியவர் இதற்கு முன்பு இவ்வளவு நெறுக்கத்தில் வெள்ளையர்களைப் பார்த்ததே இல்லை!

அவர்கள் ஆங்கிலத்தில் ஏதோ கேட்டார்கள். பெரியவர்க்கு ஒன்றும் புரியவில்லை!

பெரியவர் பயந்தபடி தன் தாய் மொழியில் ஏதோ சொன்னார், அது அந்த வெள்ளையர்களுக்கு புரியவில்லை!

இந்த குழப்பமான உறையாடல் சிறிது நேரம் நீடிக்கிறது. பெரியவர்க்கு ஒன்றும் புரியவில்லை, விட்டால் போதும் என நினைக்கிறார். வெள்ளையர்கள் சட்டென்று ஒரு பெரும் தொகைக்கு மதிப்புடைய ரூபாய் தாள்களை எடுத்து பெரியவர் கையில் தினிக்கிறார்கள். பெரியவர் இவ்வளவு பணத்தை மொத்தமாய் பார்த்ததே இல்லை!

பெரியவர்க்கு, இப்பொழுது ஏதோ புரிகிறது. இவ்வளவு நேரம் இந்த வெள்ளையர்கள் பணத்தைப் பற்றிதான் ஏதோ பேசி இருக்கிறார்கள். பெரியவர் சந்தோஷத்துடன், சிரித்தபடி ஏதோ சொல்ல, வெள்ளைகாரர்கள் ஏதோ புரிந்தார்ப்போல் தலையை ஆட்டி பதிலுக்கு சிரிக்கிறார்கள்.

இவ்வளவு பணத்தை தன் மனைவியிடம் கொடுத்தால் அவள் ரொம்பவே சந்தோஷப்படுவாள் என நினைத்துக் கொண்டு, ஆடுகளை அங்கேயே விட்டு விட்டு, வெள்ளையர்களிடம் சொல்லிக்கொண்டு , முதலில் பெரியவர் அங்கிருந்து கிளம்பி தன் வீட்டுக்குப் போகிறார்.

இதுதான் கதை!  இதில் இருக்கும் சம்பவம் என்ன என்று உங்களுக்குப் புரிகிறதா?

இந்த சம்பவத்தை வைத்து,  உலகப் புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் ஆர்.கே  நாராயணன் அவர்கள் எழுதிய ஒரு சிறுகதை மிக சுவாரஷ்யமா இருக்கும். இந்த கதையை நீங்கள் படித்து இருப்பிர்கள் என நினைக்கிறேன். மேலும் இந்த கதையைப் பற்றி நாம் விரிவாக பேசும்முன்...

மூன்றாவது   சம்பவம் +கதையை  பார்த்துடுவோம்!

தமிழ் இலக்கியம் கடலென பரந்து விரிந்து கிடக்கிறது. அதில் அதிகம் அரியப்படாத ஒரு எழுத்தாளர், தன்னுடை கதையில் கையான்ட ஒரு சாதாரணமான சம்பவம் இது!

ஒரு டெலிபோன் பூத்! அங்கே வேலை செய்யும் ஒரு பெண். அந்த பெண்ணுக்கு,  தினமும் நேரம் தவராமல் போன் செய்ய வரும் ஒரு இளைஞன் மேல் ஒரு வித இனம் புரியாத ஈர்ப்பு ஏற்படுகிறது. முன்பெல்லாம் எப்பொழுதாவதுதான் அவன் நினைவு வரும்.!

ஆனால் இன்று?!

காலையில் இருந்தே அவன் நினைவு. அதுவும் அதிகமாகவே அவளை  அழுத்திக் கொண்டு இருக்கிறது! அவன் போன் செய்ய வரும் நேரத்தை எதிர்பாத்து, அவனைப் பற்றிய பல்வேறு நினைவுகளில் முழ்கி கிடக்கிறாள்.

அன்று யார் யாரோ  போன் செய்ய வந்து, போன் பேசிவிட்டு செல்கிறார்கள்! அவள் எல்லோருடனும் அவனை ஒப்பிட்டு பாரத்துக் கொண்டு இருக்கிகிறாள்! யாருமே அவனைப் போல் தனித்துவமாய் இல்லை என்று அவளுக்குத் தோன்றுகிறது!

பல்வேறு விதமான குணம் கொண்ட இளைஞர்களும், பெண்களும் வந்து போய்கொண்டு இருக்க...

அவள் தனக்குத் தெரிந்த அத்தனை மனிதர்களையும் தன் நினைவுக்கு கொண்டு வந்து அவர்களோடு அவனை ஒப்பிட்டு பார்க்கிறாள்! அவன் எல்லோரையும் விட சிறந்தவன் என்றே அவளுக்குத் தோன்றுகிறது!

அந்த டெலிபோன் பூத் க்கு  தினமும் வந்து போகும் அத்தனை  வாடிக்கையாளர்களும் வந்து போய் விட்டார்கள். அவன் வழக்கமாய் வந்து போகும் நேரமும் வந்து.. கடந்து போய் விட்டது. வசுலுக்கு பூத் முதலாலி கூட வந்து போய்விட்டார்! அவன் மட்டும் இன்னும் வரவே இல்லை.?!

பூத் மூடுவதற்கான நேரம் ஆகிவிட்டது.

அவளுக்கு பெரும் ஏமாற்றம். என்றுமே இல்லாத அளவிற்கு  இன்று, காலையில் இருந்தே அவனைப் பற்றிய நினைவுகளுடன்.. அவனை எதிர்பாத்து காத்துக் கிடந்ததினால் ஏற்பட்ட ஏமாற்றம்!

அவள்  நம்பிக்கை இழந்து.. போன் பூத்தை மூட தயாரான நேரம் அவன் வந்தான்!

வழக்கம் போல், அவளைப் பார்த்ததும் அவனுடைய சிறு புன்னகை.  அவளிடம் ஒரு வார்த்தை.  வழக்கம் போல் போனில் இரண்டொரு வார்த்தை பேசிவிட்டு, அங்கிருந்து அவன் கிளம்பிச் சென்றுவிடுகிறான்!

அவ்வளவுதான் இந்த சம்பவம்!

அவள் விகடன் புத்தகத்தில் பிரசுரமான ஓர் அழகான சிறுகதை இது!  பாலு சத்யா என்பவர் இக்கதையின் ஆசிரியர்!

சரி...
இந்த மூன்று கதைகளுக்குள்ளும் இருக்கும் சம்பவங்கள் என்னென்ன என்று உங்களுக்கு நன்றாக புரிந்து இருக்கும் என நம்புகிறேன்..!

இனி இந்த சம்பவங்கள்  எப்படி கதைகளாக மாற்றப் பட்டுள்ளன என்றும், அவ்வாறு மாற்றிய பின்பு அவை எந்தளவு ஒரு முழுமைப் பெற்ற கதைகலாக மாரியுள்ளது என்று அடுத்த திவில் மிக விரைவாகப் பார்க்கலாம்..!

உங்கள் கருத்துக்களை மறக்காமல் எழுதுங்கள்!

திங்கள், 6 அக்டோபர், 2014

திரைக்கதை எழுதுவது எப்படி?

நேற்றைய இரவு என் நண்பன் ஏழைப்பங்காளன் (மிரள வேண்டாம், இதுதான் அவனுடைய உண்மையான பெயர்) புல் போதையில் வந்து என் தூக்கம் கெடும்படி ஒரு மொக்க உரையாடலை நிகழ்த்தி விட்டு போனான்! பெரும்பாலன குடி ராஜாகளுக்கு போதையில் இருக்கும் போதுதான் பாசம் பொங்கும்! பல முறை... பல நாட்கள் சொல்லி இறுக்கிறேன் "குடிச்சுட்டு நைட் டைம் ல என்னை தேடி வீட்டுக்கு வராதேடா" சரி விட்டுவிவோம்! அவன் என்னைப் பார்க்க வந்த காரணம் இதுதான்... 'பாலா எனக்கு புதுசா ஒரு கதை தோனுச்சு.. அதை உங்கிட்ட சொல்லலாம்னு தான் வந்தேன். எனக்கு என்ன சொல்வது என்று புரியவில்லை, சரி இவனுக்கு னு ஒரு பத்து நிமிடம் ஒதுக்கியாச்சு, அந்த பத்து நிமிசம் இவன் என்ன பேசனுமோ பேசட்டும்,, என்று நினைத்து சோல்லுடா என்ன கதை? என்றேன். அவன் சொன்ன கதையின் ஆரம்பம் இதுதான், நம்ம நாட்டுல பிச்சகாரங்க அதிகமாய்ட்டாங்கல.. அவங்கல வச்சி என்னடா பன்னலாம்? அவன் கேட்ட கேல்வி ல நான் ரொம்பவே கடுப்பாகிப்போனேன்.. இருந்தாலும் வெளியே காட்டிக்காம சொன்னேன், அவங்கள வச்சி என்ன பன்றது பிச்சதான் எடுக்லாம். உடனே அவன் குறுக்கிட்டு, "அதான் இல்ல. இந்த கதைல என் ஹீரோ ஊர்ல இருக்கிற எல்லா பிச்சகாரங்களையும் கடத்துரான்" எனக்கு கிர்னு தலைசுற்ற ஆரம்பித்தது! இப்பொழ்து உங்களுக்கு எப்படி இருக்கிறது..?! அவன் ஏதோ விளையாட்டுக்கு சொல்கிறானோ என்று ஆரம்பத்தில் தவராகக்கூட நினைத்தேன், ஆனால் அதற்கு அடுத்த பத்து நிமிடங்களில் என் காதில் இரத்தம் வராததுதான் மிச்சம்! சில வறுடங்களுக்கு முன்பு (2005) இயக்குனர் பாலா அவர்களிடம் உதவிஇயக்குனராக சேரவேண்டும் என்ற கனவோடு சென்னையில் சுற்றி திறிந்து கொண்டிருந்த காலம்! அப்பொழ்து நிறைய புத்தகங்கள் படிக்கிற வாய்ப்பும் நேரமும் நிறையவே கிடைத்தது! உள்ளூர் இலக்கியம் முதல் உலக இலக்கியம் வரை படிக்கப் படிக்க கதை என்பது என்ன? எவ்வாறு ஒரு சிறந்த கதையை தேர்ந்தெடுப்பது? (கவனிக்கவும், ஒரு இயக்குனரோ, கதாசிரியரோ யாருமே ஒரு சிறந்த கதையை உருவாக்குவதே இல்லை! இதுதான் நிஜம்! அவர்களுடைய வேலை ஒரு நல்ல கதையை தேர்ந்தெடுப்பது மட்டுமே!) கதை ஓக்கே! அது என்ன நல்ல கதை? அது வேற ஒன்றும் இல்லை கேட்கவும்- பார்க்கவும் - எழுத்து மூலம்சொல்லப்பட்ட கதையென்றால் படிக்கவும் ரெம்பவே சுவாரஸ்யமாய் இருக்க வேண்டும்! இதுதான் முதல் விதி! இதை நான் சொல்லவில்லை நான் படித்த ஒரு சில புத்தகங்கள் அப்படித்தான் சொல்லி கொடுத்தன! ஒரு நல்ல கதை எப்படி அடையாலம் கான்பது? அந்த அனுபத்தை பெறத்தான் நீங்கள் நிறைய படிக்க வேண்டும்! நிறைய படித்துப் படித்து நிறைய கற்க வேண்டும்! யார் யார் என்னெனன் கதைகளை எப்படியெல்லாம் சொல்லி இருக்கிறார்கள் என்ற ஆழ்ந்த புரிதல் ஏற்பட வேண்டும்! பிறகு உங்கள் வாழ்க்கையில், உங்கள் அனுபத்தில் இருந்தே ஏதேனும் ஒரு சம்பவத்தை எடுத்து தூசு தட்டி (அதாவது உங்கள் நினைவுக்கு கொண்டுவந்து) அந்த அனுபவத்தை கதையாக்குவது ஒன்றுதான் கதை எழுத மிகச்சிறந்த வழி, மிகச் சுலமான வழியும் இதுதான்! ஒரு வேலை உங்கள் வாழ்க்கையில் சுவாரஸ்யமான சம்பவங்களோ நிகழாதது போல் உங்களுக்கு தோன்றினால், அது நிஜமில்லை! உண்மையில் ஒவ்வொரு மனிதனுக்கும் மூட்டை மூட்டையாய் அவர்களுக்கே மட்டும் கிடைத்த அனுபவங்கள் உண்டு! அந்த அனுபவங்களை வைத்து அவர்களால் கதை பண்ண முடிய வில்லை என்பதுதான் உண்மை! ஒரு வேலை உங்கள் அனுபவத்தை வைத்து கதை பன்ன உங்களுக்கு விருப்பம் இல்லாமல் போகலாம்! இது போன்ற சூழலில் உங்க ஊரில் நடந்த மறக்க முடியாத சம்பவங்களையோ, அல்லது இன்னும் நெறுக்கமாய் நீங்கள் பார்த்த, பழகிய மனிதர்களின் வாழ்வில் இருந்து கதைக்கான சம்பவங்களை தேர்ந்தெடுத்து பிறகு கதையாக்குவது ரொம்பவும் நல்லது. இது போன்று உருவாக்கப்படும் கதைகளில் மட்டும்தான் அந்த மக்களின் பண்பாடும் கலாச்சாரமும் முழ்மையாக வெளிப்படும்! ஒரு நல்ல கதையும், நல்ல சினிமாவும் இதன் அடிப்படையில்தான் அளவிடப்படுகிறது! உதாரணத்திற்கு.... சென்ற வறுடம் வெளவந்த, 'மதயானைக் கூட்டம்' ஒரு நல்ல திரைப்படம்! மேலும் ஒரு சம்பவத்தை எப்படி சிறுகதை ஆககுவது என்று கற்றுக்கொள்ள, நிறைய சிறுகதைகளை தேடிபிடித்து படியுங்கள். தமிழில் எஸ்.இராமகிருஷ்ணன் அவர்களுடைய துணையெழுத்து மற்றும் கதாவிலாசம்" என்ற இரண்டு புத்தகங்களே போதும், ஒரு சம்பவத்தை எப்படி கதையாக்குவது என்று கற்றுத்தர?! சரி.. நான் கற்றுக் கொண்ட ஒரு எளிமையா சூத்திரத்தை இப்பொழுது உங்களுக்கு கற்றுத்தருகிறேன்.. நிச்சயம் இது ஊங்களுக்கு உதவும்! ஏவ்வாறு எனில் அனைத்து விதமான கதைகளுக்குள்ளும் ஒளிந்திருக்கும் அடிப்படை விஷயமே இதுதான்! அதனால் கொஞ்சம் கவனமாக படிக்கவும். எனக்கு தெரிந்த வரையில் இவ்வளவு எளிமையாய் யாருமே விளக்கி சொன்னதே இல்லை! மூன்று சம்பவங்களைத் தருகிறேன் கவனமாக படியுங்கள்! 1) இரண்டு நண்பரகள் பேசிக்கொள்கிறார்கள், "வாழ்க்கையில் முன்னேறி பணம் காசுனு சந்தோஷமா நாம வாழனும்னா இந்த ஊரை விட்டு வெளியேறி, தலைநகரம் போய் ஏதாவது தொழில் செய்தால்தான் நடக்கும்! அந்த யோசனையை மற்றொறு நண்பன் ஏற்றுக்கொள்ளவில்லை! ஒரு நிபந்தனையுடன் ஒருவன் மட்டுமே தலைநகரத்திற்கு பிழைப்பு தேடிப்போகிறான்!? அவர்கள் தங்களுக்குள் போட்டுக்கொண்ட நிபந்னை இதுதான், "இருபது வறுடம் கழித்து யார் எந்த நிலையில் இருந்தாலும், இதே நாள்ல இதே இடத்துக்கு இதே நேரத்திற்கு வந்து மற்றவர்க்காக காத்திருக்கனும்! இன்றோடு இருபது வறுடங்கள் ஓடிவிட்டது, இன்றுதான் இருபது வறுடங்களுப்பிறகு சந்திக்கும் நாள்! தலைநகரம் பிழைப்பு தேடி சென்ற நண்பன் சரியான நேரத்திற்கு வந்து தன்னுடைய இளமை கால நண்பனை காண அந்த இருளில் காத்திருக்கிறான்! நேரம் போய்ககொண்டு இருக்கிறது. நண்பன் இன்னும் வரவில்லை! இரவு நேரம் என்பதால் சாலையில் மனித நடமாட்டமே இல்லை! ஒரு போலிஸ்காரர் மட்டும் ரோந்து போய்க்கொண்டு இருக்கிறார்! மெதுவாய் தூரல் போட்டுக்கொண்டு இருக்கிறது! ரோந்து போன போலிஸ்காரர் திரும்பி வருகிறார். இவன் வெகுநேரம் இருளில் தனியே நிற்பதைக் கண்டு, அவனிடம் விசாரிக்கிறார். அவன் ஒரு சிகரெட் பற்ற வைத்துக்கொண்டு எல்லாவற்றையும் சொல்கிறான்! அவன் சிகரெட் பற்ற வைக்கும் போது போலிஸ்காரர் அவனுடைய முகத்தைப் பார்க்கிறார். அவன் கையில் வைர கற்கள் பதித்த கோல்ட் வாட்ச்! அவனுடைய பணக்கார தோற்றம் கண்டு, "உங்கள் நண்பரை சந்திக்க வாழ்த்துக்கள் " என கூறி கை குலுக்கிவிட்டு போலிஸ்காரர் கிளம்பிப் போகிறார. அதன் பிறகு சிறிது நேர காத்திருப்பில் ரெய்ன் கோட் பேட்டபடி அவனது நண்பன் வந்து பெயர் சொல்லி அழைக்கிறான். உற்சாகத்துடன் இருவறும் கட்டி அனைத்துக் கொள்கிறார்கள்! இது ஒரு சம்பவம்! இந்த சம்பவத்தை வைத்து 'உலக சிறுகதை மன்னன்" ஓ.ஹென்றி அருமையான கதை ஒன்றை எழுதி இருப்பார்.! அந்த கதையை நீங்கள் படித்து இருக்கிறிர்களா? இந்த சம்பவம் கதையாக மாரும்போது என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்து இருக்கிறது என்பது பற்றியும், மேலும் இரண்டு கதைகளைப்பற்றியும் அடுத்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்! உங்கள் கருத்துக்களை மறக்காம எனக்கு எழுதுங்கள், நான் தொடர்ந்து எழுத உதவியாய் இருக்கும்!

சனி, 4 அக்டோபர், 2014

மாந்திரீகம் கற்கலாம் வாங்க...

Once opon in a Time...
முன்பு ஒரு காலத்தில் நம் இந்திய தேசத்தில் சர்வ வல்லமை படைத்த சித்தர்கள் பலர் வாழ்ந்தார்கள் என்பதை நாம் சில பல புத்தகங்களின் வாயிலாக படித்து அறிந்து இருக்கிறோம். அவர்கள் எப்படி சித்தர்கலாக ஆனார்ள் என்று நீங்கள் எப்பொழுதாவது யோசித்து இருக்கிறிர்களா? இந்த பூமியில் பிறக்கும் யாருமே அவதார புருஷர்கள் இல்லை" எபதுதான் நிஜம்.

ஒரு மனிதன் அவன் வாழும் காலத்தில் அவன் எவ்வாறு வாழ்கிறான் என்பதுதான் அவன் பிறப்பின் முக்கியத்துவமாக இந்த உலகம் அறிந்து கொள்கிறது! பிறப்பினால் சிறப்பு இருக்கலாம்... ஆனால் பிறப்பால் சிறப்பு இருக்கவே முடியாது!
நீங்கள் முயன்றால் நீங்களும் ஒரு சித்தராக ஆகலாம் என்பதை உங்கலாள் நம்ப முடிகிறதா?
ஆனால.. முடியும் என்பதுதான் நிஜம்! நான் அவ்வாருதான் நம்பிக்கொன்டிருக்கிறேன். எனக்கு அப்படி ஒரு நம்பிக்கை வந்ததற்கு மிக ஆழ்ந்த காரனங்ஙஙள் உண்டு!
எனக்கு ஏற்ப்பட்ட அந்த சில விசித்திர அனுபவங்கள் உங்களுக்கும் ஏற்பட்டு இருக்கலாம்! அல்லது எனக்கே எனக்காக மட்டுமே கிடைத்த அபவமாக கூட அது இருக்கலாம்!
ஏதோ  அமானுஷ்ய கதை சொல்லப் போகிறேன் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு!

என் அனுபவங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வதற்கு முன்பாக ஒரு சந்தேகம் மதில் தோன்றுகிறது...
ஒரு நாள் என் நெறுங்கிய நண்பன் ஒருவன் எனது வீட்டிற்கு வந்து, தான் கண்டெடுத்த புதையலைப்போல் பெருமையோடு ஒரு துண்டு காகிதத்தை என் கையில் கொடுத்தான்! செய்தித்தாள்களில் வரும் வரி விளம்பரம் அது!  அதில் இருந்த வாசகம் இதுதான்  "மலையால மாந்தீரிகம் கற்றுத்தரப்படும்" நான் எனது நண்பனிடம் சொன்னேன்  " நான் இதை நிறைய முறை பார்த்து இருக்கிறேன்" என்று..
அந்த விளம்பரத்தை நீங்களும் பார்த்து இருப்பிர்கள் என நினைக்கிறேன். அந்த விளம்பரத்தைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறிர்கள்?


சரி இப்பொழ்து எனக்கு ஏற்ப்பட்ட அனுபவங்களைப் பார்ப்போம்

சில வருடங்களுக்கு முன்பு.. 1997 - 1998 ல் நான் ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டு இருக்கும் பொழுது சந்தோஷ் என்று ஒரு நண்பன் எனக்கு மிகவும் நெருக்கமாக இருந்தான்.
ஒரு நாள் ந்தோஷ் ஒரு புத்தகத்தை கொண்டுவந்து என்னிடம் கொடுத்து பாலா "இதைப் படிச்சுப் பாருடா" என்று தந்தான். அது மிகப் பழைய புத்தகமாக இருந்தது! அந்த புத்தகத்தில் இருந்த குறிப்புகள் யாவும் மாந்தீரிக செய் முறைகளும் விளக்கங்ளும் மிதமிஞ்சி இருந்தது! மேலும் அந்த புத்தகத்தில் இருந்த மாந்திரீக செய்முறைகளளும் அதன் பலன்களும் நம்பகத் தன்மை அற்றதாகவே இருந்தது!

நிற்க,

என் நண்பன் சந்தோஷ்  கேட்டான் 'இதையெல்லாம் நம்பறி
யா பாலா?'
பின்பு அவனாகவே சொன்னன் "நான் இதுல எதையாவது ஒன்னை செஞ்சு பார்க்கப்போறேன்டா"
எனக்கு அவனுடைய விருப்பம் விசித்திரமாப் பட்டது.
நான் சொன்னேன் "ஆதிவாரம் - இரட்டைவால் அரனை- கருங்கழுதை- முள்ளெலி- ஒளிவீசும் மரம்- கருடன் கூடு.., இதெல்லாம் எங்க கண்டு தேடுவ?"என்று.
இதில் ரொம்பவே விசித்திரம் என்னவென்றால்... அந்த புத்தகத்தில் ஒரு மரத்தைப் பற்றி குறிப்பிட்டு இருந்தது, ஒரு மரத்தில் பழம் பழுத்து அந்த பழத்தின் கொட்டைகள் கீழே விழுந்த சிறிது நேரத்திற்கெல்லாம் அந்த கொட்டைகள் எல்லாம் மீண்டும் அந்த மரத்திலேயே போய் ஒட்டிக்கொள்ளும்' என்று.

இதை படித்தவுடன் எனக்கு சிரிப்புதான் வந்தது... பொய் சொல்லக் கூட ஒரு அளவு இருக்க வேண்டாமா.? என்று தோன்றியது..!
அடுத்து,
ஒரு மூலிகையின் வேர் ஒன்றை எடுத்து தாயத்து செய்து நாம் அனிந்து கொண்டோம் என்றால்...?!
அந்த மூலிகை வேர்க்கு இரும்பை இளக வைக்கும் தன்மை உண்டு!
ஆக, அந்த புத்தகம் முழுக்க இந்த புமியில் இல்லாத பொருட்களை தேடி எடுக்கச் சொல்லி இருந்தார்கள்! அவ்வாறு நீங்கள் கண்டெடுத்திர்கள் என்றால்  தெய்வத்திற்கு நிகரான அஷ்டமா சித்துக்கள் உங்கள் கைவசம் வரப்பெருவீர்கள் (அஷ்டம சித்துக்கள் என்றால் எவை எவை? அவற்றை ஒவ்வொன்றாய் பெருவது எவ்வாறு என்று அடுத்த பதிவில் பார்க்கலாம்!)


அந்த புத்தகம் படித்த சில வறுடங்களுக்குப் பிறகு, அந்த புத்தகம் பற்றிய பெரும்பாலன தகவள்களை நான் மறந்தேவிட்டேன்.
இதற்கு இடைப்பட்ட இரண்டொரு வருட காலத்தில், கொஞ்சம் கொஞ்சமாய் ஒரு துறவியைப் போல் மாரிக்கொண்டிருந்த என் நண்பன் சந்தோஷ் ஒரு நாள் தற்கொலை செய்துகொண்டு இறந்து போனான்.
அதன் பிரகு நடந்த சம்பவங்கள்.!

1) ஒரு நாள் என் தந்தை வழி பாட்டி ஊருக்கு நான் சென்றிருந்த போழ்து, அங்கே ஒரு பழைய பாக்யா புத்தகம்...
அதில் இரும்பை இளக வைக்கும் அந்த விசித்திர மூலிகையின் வேர் புகைப்பம். அதைப்பற்றிய ஒரு கட்டுறை!


2) விழுப்புரத்தில் ஒரு பழைய புத்தக கடை அங்கே நான்..! என் கையில் ஒரு பழைய குங்குமம் புத்தகம். அதில் அந்த விசித்திர விருச்சம் பற்றிய கட்டுறை. "மரத்தில் ஒட்டிக் கொள்ளும் கொட்டைகள்" என்ற தலைப்பில்?! கூடவே அந்த மரத்தின் புகைப்படம்! அந்த மரம் இருக்கும் ஊர், அந்த ஊரின் மாவட்டப் பெயர்!

3)குன்றத்தூர் அங்கே ஒரு பழைய இரும்பு மற்றும் பழைய பேப்பர் கடை! அங்கேயும் நான்?! என் கையில், நான் எப்பொழ்தும் தொட்டிறாத இந்திராசௌந்தர்ராஜன் அவர்களுடைய "பாக்கட் நாவல்" அதில் "இரவில் ஒளி வீசும் அபூர்வ விருச்சம்" என்று சில தவல்கள். அந்த மரம் இருக்கும் ஊரின் பொயர், அந்த மரத்தை காலம் காலமாய் பாதுகாத்து வரும் குடும்பத்தின் பெயர்!

4)ஆவடி அருகே பட்டாபிராம் என்ற ஊர் ...................................................

உதாரனங்கள் போதும் என்று நினைக்கிறேன்?!

இப்பொழ்து நீங்கள் சொல்லுங்கள் இதெல்லாம் சாதாரமான சம்பவங்கள் தானா? ஆம் என்பது உங்கள் பதிலாக இருக்குமானால்..
நிச்சயமாக என்னால் "இல்லை" என்று மறுக்க முடியும்?!
ஒரு வேலை இந்த அனுபவங்கள் யாவும் ஏதோ ஒன்றை சொல்கிறது என்றால்...? வாருங்ள் அவை என்னவென்றுப் பார்க்கலாம்! நீங்களும் நானும் கைக்கோர்த்து செயல்பட வேண்டும் என்பதற்காக கூட இன்னும் சில சம்பவங்கள் நம் வாழ்வில் நிகழ்ந்து கொண்டிருககலாம்!

ஒரு வேலை நீங்கள் எதையும் நம்பாமல்... அந்த அபூர்வ சக்திகொண்ட மரங்களை மட்டுமே பார்கக விரும்பினால்... ?!
!
வாருங்கள் ஒரு முறை சென்று பார்த்து வருவோம்!
உங்கள் கருத்துக்களை எனக்கு எழுதுங்கள், எதிர் பார்த்து காத்துகிட்டு இருப்பேன்.